Friday, November 03, 2006

சமணர் - அமணர்


சமணர் - அமணர்


அமணர் என்பது தூய தமிழ்ச் சொல். இச்சொல் சமணர் என்ற சொல்லுக்கு நேர் பொருள் என்று நிறைய அறிஞர்கள் கருதுகிறார்கள். இது தவறு. "ஸமண்" என்பது பிராகிருதச் சொல்.

இதற்கு "முயற்சி"என்பது பொருள். "ஸமண்" என்ற சொல்லோடு ஆர் விகுதி சேர்த்துதமிழில் "சமணர்" என்று வரும். தமிழ் உச்சரிப்பும் பாகத (பிராகிருத)உச்சரிப்பும் மிகுந்த நெருக்கம் உண்டு.

சமணர் என்றால் "முயற்சியாளர்" என்று பொருள். இச்சொல் பொதுவாக இல்லற நோன்பிகளையும், துறவற விரதிகளையும் குறிக்கும் பொதுச் சொல். ஆனால் "நிர்கந்த" என்றால் "அமணம்" என்று பொருள்படும். "நிர்கிரந்த" என்பதற்கு ஆடை அணிகளற்ற, திகம்பரம் என்பது. நிர்கந்தர் என்றசொல் துறவிகளைக் குறிக்கும்.


"துக்கம் துடைக்கும் துகளறுகாட்சிய
நிக்கந்த வேடத்து இருடி கணங்களை
ஒக்க அடிவீழ்ந்து உலகியல் செய்தபின்
அக்கதை யாழ்கொண்டு அமைவரல் பண்ணி "
- வளையாபதி


அதுபோல "ஸமணர்" என்ற சொல் ஜைனத்தின் இரு பிரிவுகளையும்குறிக்கும். பெளத்தம், ஆசிவகம் ஆகியவற்றிக்கு "தாய்" சமணம். சமணம் என்றால் அது ஜைனமே! பெளத்த நூற்களில் ஜைனத்தைக் குறிக்க "ஸமண" என்ற சொல் வழங்கப்படுகிறது.


அன்புடன்,


இரா.பானுகுமார்,
சென்னை.

3 comments:

R.DEVARAJAN said...

’ச்ரமணர்’ – கடுமையான நோன்புகளை மேற்கொள்வோர்
இச்சொல் சமணர் என்றும், அமணர் என்றும் மாற்றுருவம் பெற்றது.
‘அமண்’, ‘அமணர்’ என்பனவற்றுக்கு வேர்ச்சொல் எது ?

தேவ்

Anonymous said...

சமணத்தில் இருந்துதான் பவுத்தம் தோன்றியதா? இது எனக்கு புதிதாய் இருக்கிறது.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

சைவ மதமும் சமணத்தில் இருந்து பிறந்ததுதான் என்கிறார்களே, உண்மையா?

Banukumar said...

//சமணத்தில் இருந்துதான் பவுத்தம் தோன்றியதா? இது எனக்கு புதிதாய் இருக்கிறது.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா?

சைவ மதமும் சமணத்தில் இருந்து பிறந்ததுதான் என்கிறார்களே, உண்மையா?//

ஐயா,

தங்கள் பெயர்க் கொண்டே இங்கு பின்னூட்டம் இடலாமே!தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

இரா.பா,
சென்னை